Wednesday, 21 March 2012

பெண் பார்க்கும் படலம்


பெண் பார்க்கும் படலம்


அவள்...
நெற்றி பொட்டின் திடம்!
காது மடல்களில்
தோடும்..திருகணியும்...
கை கோர்த்து நிற்கும் விதம்!
கை விரல்களின்
நகபூச்சின் நிறம்!
சங்கு கழுத்தில் சங்கிலி
அதில்
தொங்கி தவிக்கும் மணி!
இன்னும் பல.....
இவை அனைத்தும் ரசித்து...
அது குறித்து.....
பின்னொரு நாள் அவளிடம்
அளவளாவ எண்ணி
புறப்பட்ட...
பெண் பார்க்கும் படலம்
அவள் கண்களில் தொடங்கி
கண்களில் நிலைத்து
கண்களிலே முடிந்தது!
அவளின் மந்திர புன்னகை கூட
மற்றவர் மூலமே
அறிந்தேன்!

No comments:

Post a Comment

Pls command